TNPSC Current Affairs July 30-31, 2020 - Download as PDF

TNPSC Current Affairs July 30-31,  2020 - Download as PDF

சர்வதேச நிகழ்வுகள்

இலங்கையில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ இந்தியா திட்டம்
  • சர்வதேச சூரிய கூட்டணி (ISA), இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான NTPC உடன் இணைந்து, இலங்கையில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் "பெல்ட் அண்ட் ரோடு" முயற்சிக்கெதிரான இந்தியாவினஅ நாடுகளை ஈர்க்கும் முயற்சி இதுவாகும்.
  • சர்வதேச சூரிய கூட்டணி (ஐஎஸ்ஏ) அமைப்பின் தலைமையகம் ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் அமைந்துள்ளது.
மாலத்தீவில் இந்திய நிதியுதவியுடன் "உயர் தாக்க சமூக அபிவிருத்தி திட்டங்கள்"
  • இந்திய அரசின் 5.6 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி மானியத்தின் கீழ் "9 மேம்பாட்டுத் திட்டங்கள்" (HICDP) மாலத்தீவுகள் நாட்டில் ஜூலை 28-அன்று தொடங்கப்பட்டன
  • அட்டு சிட்டியின் மாவட்டங்களில் கெய்தோஷு மாஸ் ஆலை மீன் பதப்படுத்தும் ஆலை மற்றும் சுற்றுலா மண்டலங்கள் பாட்டில் நீர் ஆலை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
  • HICDP: High Impact Community Development Projects.
இந்தியா-ஜிம்பாப்வே "பாரம்பரிய, ஹோமியோபதி மருத்துவ" ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூலை 29-அன்று நடந்த மத்திய அமைச்சரவை, பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி துறையில் ஒத்துழைப்பு குறித்து இந்தியாவிற்கும் ஜிம்பாப்வேவிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 
  • புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் சமத்துவம் மற்றும் பரஸ்பர நன்மை அடிப்படையில் இரு நாடுகளுக்கு இடையே பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதியை மேம்படுத்துவதாகும்.
 இந்திய நிகழ்வுகள்
புதிய கல்விக் கொள்கை - மத்திய அமைச்சரவை ஒப்புதல் 
  • இந்தியாவில் கடந்த 1986-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கையில் (National Policy on Education 1986), பின்னர் 1992-ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது.
  • மறைந்த டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட "புதிய கல்விக் கொள்கையின் பரிணாமக் குழு" (T.S.R. Subramanian Committee), 2016 மே மாதம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில், அமைச்சகம் 2016-ஆம் ஆண்டு வரைவு தேசிய கல்வி கொள்கைக்கு சில உள்ளீடுகளை தயாரித்தது. 
  • இதனைத் தொடர்ந்து, புதிய கல்வி கொள்கை உருவாக்குவதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு (Dr K. Kasturirangan Committee) ஒன்று 2017-இல் அமைக்கப்பட்டது. இந்த குழு புதிய கல்வி கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை தயாரித்து, 2020 மே 31-ந் தேதி மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்கிரியாலிடம் வழங்கியது. இந்த குழு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 1-ல் தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை வெளியிட்டது.
  • புதிய கல்விக் கொள்கை 2020-க்கு (National Education Policy), பிரதமர் மோடி தலைமையில் 2020 ஜூலை 29-அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய விவரங்கள்:
  • இனி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயர் மாற்றப்பட்டு, மத்திய கல்வித்துறை அமைச்சகம் (MHRD as Ministry of Education-MoE). என்று அழைக்கப்பட உள்ளது.
  • நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) மதிப்பில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படும்
  • தற்போது 8-ம் வகுப்பு வரை உள்ள இலவச கட்டாயக் கல்வி திட்டம் 12-ம் வகுப்பு வரை நீட்டிக்கப்படுகிறது.
  • 2030-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை 
  • 15 ஆண்டுகளில் இணைப்புக்கல்லூரி என்ற முறை நிறுத்தப்படும்.
  • எம்.பில் படிப்புகள் நிறுத்தபடுகிறது.
  • தேசிய ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படுகிறது.
  • நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 சதவிகிதத்தை கல்விக்கு ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
  • 5+3+3+4 என்ற முறையில் பள்ளி வகுப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்பிக்கப்படும். பள்ளிக்கு வராமல் இருக்கும் 2 கோடி குழந்தைகள் 2020-ம் ஆண்டுக்குள் பள்ளியில் சேர்க்க புதிய கல்வி கொள்கை வகை செய்கிறது.
  • மருத்துவம், சட்டம் உள்ளிட்ட ஒட்டுமொத்த உயர்கல்வியையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படும்.
  • தொன்மையான மொழிகளை அங்கீகரிக்கும் வகையில் தேசிய கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும். தேசிய கல்வி தொழில்நுட்ப அமைப்பு (என்.இ.டி.எப்.) உருவாக்கப்படும்.
  • உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ratio) 2030-க்குள் 50% ஆக உயர்த்தப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2018-ல் 26.8% ஆக இருந்தது.
'எனது அரசு' திட்டம் - ஆறு ஆண்டுகள் நிறைவு
  • அரசுக்கும், குடிமக்களுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைத்து, அரசு நிர்வாகப் பணிகள் மற்றும் கொள்கை விவாகரங்களில் மக்களையும் பங்கேற்கச் செய்யும் வகையில் 'எனது அரசு' திட்டத்தை 2014-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்தது. 
  • அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் பல்வேறு தீா்மானங்களை நிறைவேற்றுவதில் 'எனது அரசு' திட்டம் முக்கியப் பங்காற்றி வருகிறது.
  • இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 2020 ஜூலை 26-அன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவுபெற்றது.  
BIS-Care செல்போன் செயலி - அறிமுகம்
  • ஐ.எஸ்.ஐ மற்றும் ஹால்மார்க் தர சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், ‘பிஐஎஸ்-கேர்’ (BIS-Care App) என்ற செல்போன் செயலி பயன்பாட்டை அறிமுகப்படுத்தினார்
  • நுகர்வோருக்காக தரநிலைப்படுத்தல், இணக்க மதிப்பீடு மற்றும் பயிற்சிக்கான மூன்றஉ e-BIS இணையதளங்களை (www.manakonline.in) தொடங்கிவைத்தார்.
44 புதிய "வந்தே பாரத்" எக்ஸ்பிரஸை இரயில்கள் 
  • இந்தியாவின் முதல் அதிவேக ரெயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை, கடந்த ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த இரயிலின் வெற்றிகாரமான பயணத்தை தொடர்ந்து, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 44 புதிய "வந்தே பாரத்" எக்ஸ்பிரஸை இரயில்களை அறிமுகப்படுத்த ரெயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் ஊடரங்கு தளர்வு 3.O 
  • ஊரடங்கில் இருந்து விலகும் 3ஆம் கட்ட தளர்வுகளையும் கட்டுப்பாடுகளையும்  மத்திய உள்துறை அமைச்சகம் ஜூலை 29-அன்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், ஊரடங்கில் இருந்து விலகும் 3-ஆம் கட்டத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மெட்ரோ ரயில், தியேட்டர்கள், கேளிக்கை பூங்காக்கள் இயங்குவதற்கு தடை தொடர்வதாக கூறப்பட்டுள்ளது.
தேசிய போர் நினைவுச் சின்னத்தில் இடம் பெறும் கல்வான் வீரர்களின் பெயர்கள்
  • இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்னை காரணமாக கிழக்கு லடாக் பகுதி.யில் உள்ள கல்வானில் 2020 ஜூன் 15 ந்தேதி இந்திய-சீன நாட்டு வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள்  20 பேர் வீரமரணம் எய்தினர். வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள் டெல்லியில் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் "இந்தோ-இஸ்லாமிய கலாசார பவுண்டேசன்" அறக்கட்டளை அமைப்பு
  • அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், மசூதி கட்டுவதற்காக அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்கி தருமாறு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, அயோத்தியில் தானிபூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச அரசு ஒதுக்கியது.
  • தற்பொது அந்த இடத்தில் மசூதி கட்டும் பணியை மேற்பார்வையிட சன்னி வக்பு வாரியம் "இந்தோ-இஸ்லாமிய கலாசார பவுண்டேசன்" என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை அமைத்துள்ளது என இந்த வாரியத்தின் தலைவர் சுபர் அகமது பரூக்கி ஜூலை 30-அன்று அறிவித்தார்.
மாவட்டங்களுக்கான "டெல்டா தரவரிசை" பிப்ரவரி-ஜூன் 2020 - பிஜப்பூர் முதலிடம்
  • நிதி ஆயோக் அமைப்பின் மாவட்டங்களுக்கான அபிலாஷை திட்டத்தின் 2020 பிப்ரவரி-ஜூன் மாதம் வரையிலான டெல்டா தரவரிசையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் முதலிடம் பெற்றுள்ளது
  • ரி-போய் (மேகாலயா) மற்றும் பஹ்ரைச் (உத்தரபிரதேசம்) ஆகியவை முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை வகிக்கின்றன.
  • 2018 ஜனவரியில் தொடங்கப்பட்ட அபிலாஷை மாவட்டங்கள் திட்டம், முக்கிய சமூக பகுதிகளில் ஒப்பீட்டளவில் குறைந்த முன்னேற்றம் பெற்றுள்ள மாவட்டங்களை வளர்ச்சி பெற்றவையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது.
  • சுகாதாரம்-ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை-நீர்வளம், நிதி உள்ளடக்கம்-திறன் மேம்பாடு மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு ஆகிய ஐந்து வளர்ச்சி பகுதிகளில் அதிகரிக்கும் முன்னேற்றத்தைக் கொண்டு அபிலாஷை மாவட்டங்களுக்கான டெல்டா தரவரிசை (Delta ranking of Aspirational districts) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரெயில்வே இணையப் பாதுகாப்பு மையம் - திறப்பு
  • இணையப் பயணச் சீட்டில் வரும் மோசடிகளை விரைவாக கண்டறிந்து விசாரிப்பதை உறுதி செய்வதற்காக புவனேஷ்வர் நகரில் உள்ள கிழக்கு கடற்கரை ரயில்வே தலைமையகத்தில் இணையப் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டது. வெள்ளை காலர் குற்றங்களை சிறப்பாகக் கண்டறிந்து வழக்குத் தொடர இணையப் பாதுகாப்பு மையம் உதவும்.
ஆந்திராவில் பிளாஸ்மா தானம் - ரூ.5,000 ஊக்கத் தொகை
  • ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கொரானா தொற்றில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஓபிசி கிரீமி லேயர் - ரூ.15 லட்சமாக உயர்த்த பரிந்துரை
  • இதர பிற்படுத்தப்பட்டோரில் மேல்நிலையினருக்கு (OBC Non-Creamy Layer) இடஒதுக்கீடு வழங்க, அவர்களது வருமான வரம்பை ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்தது.
  • சதானந்தன் ஆணையம்: சமூக ரீதியாகப் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 
  • இப்பிரிவில் வசதியானவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற கருத்து உருவானதன் அடிப்படையில் 1971-இல் சதானந்தன் ஆணையம் பொருளாதார ரீதியாக வசதியாக உள்ளவர்களை மேல்நிலையினராக (கிரீமி லேயர்) வகைப்படுத்தி, அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டியதில்லை என்று ஆணையம் பரிந்துரைத்தது. அதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றமும் 1993-இல் இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்தது. 
  • ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சம் வருமானம் உள்ள இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டுச் சலுகைகள் நிறுத்தப்பட்டன. 
  • இந்த வருமான வரம்பு 2013-இல் ரூ. 6 லட்சமாகவும், 2017-இல் ரூ. 8 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது.
மிசோரமில் கிரீன்-ஏஜி திட்டம் - தொடக்கம்
  • உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி அமைப்பின் (Global Environment Facility), நிதியளிக்கும் திட்டமான பசுமை-வேளாண்மை (Green-Ag), இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் ஜூலை 29-அன்று தொடங்கப்பட்டது. 
  • இந்த திட்டம், மிசோரம் உள்ளிட்ட மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. 
  • கிரீன்-ஏஜ் திட்டங்கள் (Green-Agriculture), கிரீன்லாண்ட் மேலாண்மை நடைமுறைகள், பல்லுயிர் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் இந்திய வேளாண் துறையை தேசிய மற்றும் சர்வதேச நன்மைகளை பெறுவதை நோக்கமாகக் கொண்டது.  
  • இந்த திட்டம் கிரீன்-ஏஜ் விவசாய நடைமுறைகள் மூலம் 49 மில்லியன் கார்பன் டை ஆக்சைடு சமமான நிலை (CO2eq) குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
குவஹாத்தி நகரில் "பாண்டிகூட்" தானியங்கி கழிவுநீர் சுத்தம் செய்யும் சாதனம் 
  • அசாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரின் முதல் மேன்ஹோல் துப்புரவு ரோபோவான “பாண்டிகூட்”(BANDICOOT) என்ற தானியங்கி கழிவுநீர் சுத்தம் செய்யும் சாதனம் ஜூலை 28-அன்று தொடங்கி வைக்கப்பட்டது. வடகிழக்கு பிராந்தியத்தில் மேன்ஹோல் துப்புரவு ரோபோவைப் பெற்ற முதல் நகரமாக குவாஹாட்டி விளங்குகிறது.
பாதுகாப்பு நிகழ்வுகள்
இந்தியா வந்தடைந்த "இரஃபேல் போர் விமானங்கள்" 
  • இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம்  (Dassault Aviation) இருந்து, 36 இரஃபேல் போர் விமானங்களை (Rafael Jets) வாங்க ரூ.60,000 கோடியில் மத்திய அரசு 2016-ல் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி, முதற்கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் 2020 ஜூலை 29-அன்று இந்தியா வந்தடைந்தன.
  • பிரான்ஸின் போர்டியாக்ஸ் நகரிலுள்ள டசால்ட் விமானத் தளத்திலிருந்து குரூப் கேப்டன் ஹர்கிரத்சிங் தலைமையில் இந்தியா நோக்கி 5 ரஃபேல் போர் விமானங்கள் ஜூலை 27-அன்று புறப்பட்டன, பயணத்தின் இடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான தளத்தில் விமானங்கள் தரையிறக்கப்பட்டன. 30 ஆயிரம் அடி உயரத்தில் அவை பறந்தபோது, நடுவானில் பிரான்ஸ் டேங்கர் விமானத்தில் இருந்து எரிபொருள் நிரப்பிக்கொண்டன.
  • ஜூலை 29-ஆம் தேதி ஹரியாணா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தை (Ambala air base No. 17 Squadron) வந்தடைந்தன. 
  • விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா விமானங்களை பெற்றுக்கொண்டார். இவை தங்க அம்புகள் (Golden Arrows) பிரிவில் இணைக்கப்படுகின்றன.
  • 1997-ம் ஆண்டு ரஷ்யாவின் சுகோய் -30 ரக விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. தற்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு மற்றோரு வெளிநாட்டு போர் விமானமாக ரஃபேல் இந்திய விமானப்படையில் இணைந்தது
  • ரஃபேல் விமானத்தை முதலில் ஓட்டிய இந்திய விமானி காஷ்மீரை சேர்ந்த ஹிலால் அகமது ரதார் ஆவார்.
  • இரஃபேல்: தொழில்நுட்ப விவரக்குறிப்புகள்: இரஃபேல் ஒரு பல்-வகை திறன் கொண்ட போர் விமானம் ஆகும். எந்தவொரு தற்காப்பு மற்றும் திடீர் தாக்குகலை மேற்கொள்ளும் (Sortie Mission) நடத்தும் திறன் கொண்டது. அதாவது இடைமறிப்பு, வான்வழி உளவு, விமான மேலாதிக்கம், நெருங்கமாக வரும் விமானங்ரகளுக்கு ஆதரவு, தரை ஆதரவு, கப்பல் எதிர்ப்பு மற்றும் அணுசக்தி தடுப்பு பணிகள் ஆகும்.
  • எரிபொருள் திறன்: ஒற்றை இருக்கைக்கு 4,700 கிலோகிராம் மற்றும் இரட்டை இருக்கைக்கு கிலோகிராம் கிலோ. 
  • மேற்கொள்ளும் போர் வரம்பு: 1,850 கி.மீ.
  • அதிகபட்ச வேகம்: மாக் 1.8 (மாக் எண் (Mach number) என்பது ஒரு விமானத்தின் வேகத்தின் ஒலியின் வேகத்தின் விகிதம்).
  • இவை நான்காம் தலைமுறையைச் சேர்ந்தவை. இரண்டு என்ஜின்கள் மூலம் இயங்கும் தன்மை கொண்டது. மணிக்கு அதிகபட்சமாக 2222 கிலோ மீட்டர் வேகத்தில் 50 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது. 10.3 மீட்டர் நீளம் கொண்ட இந்த விமானம், அதிகபட்சமாக 24,500 கிலோ எடை கொண்டது. 9500 கிலோ எடை வரை ஆயுதங்களை சுமந்து செல்லும் வல்லமை கொண்டது.
  • பல்முனைத் தன்மை கொண்ட ரேடார் வசதி இருப்பதால் 100 கிலோ மீட்டர் தூரம் வரை ஒரே நேரத்தில் 40 இலக்குகளை கண்டறிந்து தாக்க இயலும். 600 கிலோ மீட்டர் தூரம் தாக்க வள்ளது.
  • பிரான்ஸ்,எகிப்து, கத்தார் ஆகியவற்றை தொடர்ந்து ரபேலை வைத்துள்ள 4 ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 
செவ்வாய் கிரக ஆய்விற்கான "பிரிசெர்வென்ஸ்" விண்கலம்
  • அமெரிக்காவின் NASA விண்வெளி நிறுவனம், புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கானவேரல் ஏவுதளத்தில் இருந்து செவ்வாய் கிரக ஆய்விற்கான "பிரிசெர்வென்ஸ்" என்று பெயரிடப்பட்டுள்ள விண்கலத்தை அட்லாஸ் 5 என்ற ராக்கெட் மூலம் ஏவி உள்ளது.
  • இந்த மாதம் செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வர உள்ளதால், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனாவைத் தொடர்ந்து அமெரிக்காவும் தனது விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு செலுத்தி உள்ளது.
  • விண்கலத்துடன், 6 சக்கர வாகனமும், சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்திற்கு  அனுப்பப்பட்டுள்ளது. 2021 பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தை இது சென்றடையும். இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை 687 நாட்கள் வரை ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதுடன் மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து பூமிக்கு எடுத்து வர உள்ளது.
விருதுகள்
குஸ்டாவ் ட்ரூவ் விருது - இந்தியாவின் முதல் சூரிய சக்தி மின்படகு "ஆதித்யா"
  • ஜூலை 26, 2020 அன்று, பிளக்க்போட்ஸ்.காம் இணையதளத்தின் முதலாவது  குஸ்டாவ் ட்ரூவ் விருது (Gustave Trouvé Award) எனப்படும் ‘குஸ்ஸீஸ்’ மின்சார படகுகள் விருது, இந்தியாவின் முதல் மற்றும் மிகப் பெரிய சூரிய சக்தி படகான "ஆதித்யா"விற்கு (Aditya) வழங்கப்பட்டுள்ளது.
  • கொச்சி கடற்படை தளத்தால் கட்டப்பட்ட ஆதித்யா மின்படகு (India’s First Solar Powered Ferry Bags), கேரள மாநில நீர் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்குகிறது.
பெருங்கடல் தொழில்நுட்ப தேசிய விருது - எம்.ஏ. ஆத்மானந்
  • சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் எம்.ஏ. ஆத்மானந் அவர்களுக்கு, பெருங்கடல் தொழில்நுட்பத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நியமனங்கள்
சிங்கப்பூரின் முதலாவது எதிர்க்கட்சி தலைவர் "பிரீத்தம் சிங்"
  • சிங்கப்பூர் நாட்டு பாராளுமன்ற வரலாற்றில், முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவர் ஜூலை 28-அன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த, வழக்கறிஞர் பிரீத்தம் சிங் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், ஜூலை 10-அன்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்று ஜூலை 27-அன்று ஆட்சி அமைத்தது. 
  • இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், வழக்கறிஞருமான பிரீத்தம் சிங்  (வயது 43) பொதுச்செயலராக உள்ள தொழிலாளர் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக மாறியது. 
  • சிங்கப்பூர் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் பார்லி., விவகாரங்கள் குறித்த வழிகாட்டுதல்களில், எதிர்கட்சி தலைவர் நியமனம் குறித்த நிலைப்பாடு ஏதும் இல்லை.
ஐக்கிய நாடுகளின் பருவநிலை இளம் ஆலோசகா்கள் இந்தியர் "அா்ச்சனா சோரங்"
  • ஐக்கிய நாடுகள் சபையின் பருவ நிலை பாதிப்புகளுக்கு யோசனைகள், தீா்வுகளை அளிக்கும் இளம் ஆலோசகா்கள் குழுவில் இந்திய பெண்மணியான சூழலியல் செயற்பாட்டாளா் அா்ச்சனா சோரங் இடம்பெற்றுள்ளார்.
  • மும்பை, டாடா சமூக அறிவியல் மைய முன்னாள் மாணவர் தலைவரான அர்ச்சனா சோரங், சுற்றுச் சூழல் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். ஆறு இளம் வல்லுனர்கள் அடங்கிய சுற்றுச்சூழல் ஆலோசனை குழு, மாசு பரவலை குறைத்து, சுற்றுச் சூழலை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை ஐ.நா.வுக்கு வழங்கவுள்ளது.
சுற்றுச்சூழல் விதிகள் நிபுணர் மதிப்பீட்டுக்குழு உறுப்பினராக "அனில் குமார் ஜா" நியமனம்
  • சுற்றுச்சூழல் விதிகளை மீறுவது குறித்து கையாளும் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் (EAC) உறுப்பினராக கோல் இந்தியா லிமிடெட்  முன்னாள் தலைவர் அனில் குமார் ஜா அவர்களை அரசாங்கம் ஜூலை 28-அன்று நியமித்துள்ளது.
  • EAC: Expert Appraisal Committee.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
உலக அளவில் புலிகள் எண்ணிக்கை - இந்தியாவில் 70%
  • உலக புலிகள் தினம் ஜூலை 29-அன்று கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, அகில இந்திய புலிகள் கணக்கீட்டு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் வெளியிட்டார். அவர் தெரிவித்த விவரங்கள்: 
  • 2018-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையின்படி (Tigers Report 2018) இந்தியாவில் 2,967 புலிகள் உள்ளன.  2006 முதல் 2018 வரை இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6% அதிகரிக்கும் விகிதம் காணப்பட்டது.
  • இதில் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 526 புலிகளும், கர்நாடகாவில் 524 புலிகளும், உத்தரகாண்டில் 442 புலிகளும் உள்ளன.
  • இந்தியாவில் தற்போது 30 ஆயிரம் யானைகளும், 3,000 ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களும், 500-க்கும் மேற்பட்ட சிங்கங்களும் உள்ளன.
  • உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீத புலிகள் இந்தியாவில்தான் உள்ளன. புலிகள் என்பது இயற்கையின் விலைமதிப்பில்லா ரத்தினங்கள். அவற்றின் இருப்பு, காடுகள் நல்ல நிலையில் இருப்பதை காண்பிக்கிறது என்று ஜவடேகர்  அமைச்சர் தெரிவித்தார்.  
டெல்லியில் நைட்ரஜன் டையாக்சைடு 70% குறைவு
  • கொரானா பரவலை தடுக்க பிறப்பித்த ஊரடங்கால், டில்லியில், காற்றில் உள்ள மாசு வாயுவான, நைட்ரஜன் டையாக்சைடு (nitrogen dioxide), 70 சதவீதம் குறைந்துள்ளது. இதை தக்க வைக்கும் கொள்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, ஐ.நா., வலியுறுத்தியுள்ளது.
குழந்தைகளை பாதி்க்கும் ஈய உலோகப் பயன்பாட்டு - யுனிசெஃப் அறிக்கை
  • சர்வதேச இலாப நோக்கற்ற அமைப்பான தூய பூமி அமைப்பு (Pure Earth), ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) மற்றும் ஆகியவை ஈய உலோகப் பயன்பாட்டால் ஏற்படும் நச்சு, உலகம் முழுவதும் ஏராளமான குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது என்ற சுகாதார நெருக்கடி குறித்த முதல் வகை  அறிக்கையை ஜூலை 30-அன்று, வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, "நச்சு உண்மை: ஈய மாசுபாடு குழந்தைகளின் எதிர்கால தலைமுறையின் வெளிப்பாட்டு சாத்தியக்கூறகளை  குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது" (The Toxic Truth: Children’s Exposure to Lead Pollution Undermines a Generation of Future Potential) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
புத்தகங்கள் & ஆசிரியர்கள்
பாடி பவஜலலு - எஸ். ஜெய்பால் ரெட்டி
  • எம் வெங்கய்ய நாயுடு கிட்டத்தட்ட வெளியிடப்பட்டது, மறைந்த எஸ் ஜெய்பால் ரெட்டியின் பத்து யோசனைகள் புத்தகத்தின் தெலுங்கு பதிப்பு "பாடி பவஜலலு"  
  • (Padi Bhavajaalalu) என்ற பெயரிலான புத்தகத்தை, ஜூலை 28, 2020 அன்று, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு மெய்நிகர் தளம் மூலம்  வெளியிட்டார்,  
தமிழ்நாடு நிகழ்வுகள்
"ஈழுவா, தீயா" வகுப்பினர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பு
தமிழ்நாடு முழுதும் வாழும், 'ஈழுவா, தீயா' வகுப்பினரை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கான ஆணைகளை, தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசு சிறப்பு மூத்த வழக்குரைஞராக "ஏ.எல்.சோமயாஜி" நியமனம்
  • அதிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சிக்கலான தன்மையுடைய வழக்குகளில் தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜராக சிறப்பு மூத்த வழக்குரைஞராக ஏ.எல்.சோமயாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு நிகழ்வுகள்
விஸ்டன் கோப்பை 2020 - "இங்கிலாந்து அணி" சாம்பியன்
  • இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையே இங்கிலாந்தில் நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என வெற்றி பெற்று இங்கிலாந்து அணி விஸ்டன் கோப்பையைக் கைப்பற்றியது
  • இந்த போட்டித்தொடர் இடையே, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் தனது 140-வது டெஸ்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி, உலகின் 7-வது பந்து வீச்சாளர் என்ற சிறப்பைப் பெற்றார்.
முக்கிய ஆளுமைகள் - இரங்கல்
எழுத்தாளர் "சா.கந்தசாமி" - காலமானார் 
  • தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான எழுத்தாளர் சா. காந்தசாமி (வயது 80) ஜூலை 31-அன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவர், 
  • 1940-ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தார். 1968-ல் வெளியான “சாயாவனம்” நாவல் மூலம் தமிழ் இலக்கிய உலகுக்கு சா.கந்தசாமி அறிமுகமானார். இந்த நாவலை தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. 
  • 1998ல் விசாரணைக் கமிசன் என்ற நாவலுக்காக, தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. மேலும் இவர் எழுதிய “நிகழ் காலத்திற்கு முன்பு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. 
முக்கிய தினங்கள்
உலக விட்ரோ கருத்தரித்தல் தினம் - ஜூலை 25
  • ஜூலை 25 உலக விட்ரோ கருத்தரித்தல் தினம் (Vitro Fertilization Day) கடைபிடிக்கப்படுகிறது. 1978  ஜூலை 25-அன்று ஐக்கிய இராச்சியத்தின் ராயல் ஓல்ட்ஹாம் மருத்துவமனையில் உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை அல்லது விட்ரோ கருத்தரித்தல் குழந்தை லூயிஸ் பிரவுன் பிறந்ததன் நினைவாக உலக ஐவிஎஃப் தினம் ஜூலை 25 அன்று கொண்டாடப்படுகிறது.
சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகள் பாதுகாப்புக்கான சர்வதேச தினம் - ஜூலை 26
  • 2015-ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் ஜூலை 26 அன்று, சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பால் சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகள் பாதுகாப்புக்கான சர்வதேச தினம் (International Day for the Conservation of the Mangrove Ecosystems) கடைபிடிக்கப்படுகிறது.
 சர்வதேச நட்பு தினம் (International Day of Friendship) - ஜூலை 30 
  • நபர்கள் கடத்தலுக்கு எதிரான உலக தினம் (World Day against Trafficking in Persons) - ஜூலை 30, 2020 நபர்கள் கடத்தலுக்கு எதிரான உலக தின மையக்கருத்து: “Committed to the Cause: Working on the Frontline to End Human Trafficking”.
தமிழ்நாடு மருத்துவமனை தினம் - ஜூலை 30
  • இந்தியாவின் முதல் பெண் டாக்டரான முத்துலட்சுமி அவர்களின் பிறந்த நாளான ஜூலை 30-அன்று, மருத்துவமனை தினமாக தமிழ்நாடு அரசால் 2019-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. 
Post a Comment (0)
Previous Post Next Post