வெப்பநிலை அதிகரிப்பும் உத்தரகாண்ட்-சமோலி வெள்ளப்பெருக்கும்

  • உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் பிப்ரவரி 7-ந் தேதி பனிப்பாறைகள் சரிந்து தவுளிகங்கா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கட்டுமானத்தில் இருந்த 2 நீர்மின் நிலையங்கள் இதில் மூழ்கின. பல கிராமங்கள் பாதிக்கப்பட்டன.
  • நேபாளம் தலைநகர் காத்மாண்டுவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டுக்கான சர்வதேச மையம் (ICIMOD) என்கிற அமைப்பு உத்தரகாண்ட் பேரிடர் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையில், "பனிப்பொழிவு இல்லாதது மற்றும் சூரிய கதிர் வீச்சின் வெளிப்பாடு அதிகரித்தது ஆகியவற்றின் விளைவாக பனிப்பாறைகளின் ஸ்திரத்தன்மை குறைந்து பாறைகள் உடைந்திருக்கக்கூடும். அத்துடன் பிப்ரவரி 4 முதல் 6 வரையிலான கடுமையான மழை பொழிவும் இந்த பேரிடர் நிகழ்வதற்கு சாதகமாக இருந்திருக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ICIMOD: The International Centre for Integrated Mountain Development.

Post a Comment (0)
Previous Post Next Post