April 2019: Important National and International Days - Theme and Notes

முக்கிய தினங்கள் ஏப்ரல் 2019
April 1st - National and International days
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) துவங்கிய தினம்  - ஏப்ரல் 1 
  • RBI DAY 2019 - APRIL 1
  • முதல் உலகப் போருக்குப் பின், இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தீர்க்க, 'ஹில்டன்- யங்' ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, 1935 ஏப்ரல் 1 ஆம் தேதி, மேற்கு வங்க தலைநகர், கோல்கட்டாவில் துவங்கப்பட்டது. 1937 இல், மும்பைக்கு மாற்றப்பட்டது.
  • ரிசர்வ் வங்கிவங்கியின் முதல் கவர்னர், சர் ஆஸ்போர்ன் ஆர்கெல் ஸ்மித் ஆவார். 
  • 1943-இல், கவர்னராக பதவி வகித்த, முதல் இந்தியர், சி.டி.தேஷ்முக். 
  • தேசிய மயமாக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி (1949)
    • இந்தியா சுதந்திரமடைந்த பின், 1949 ஜனவரி 1 ஆம் தேதி, இந்திய ரிசர்வ் வங்கி தேசிய மயமாக்கப்பட்டது.
    • கவர்னர் தலைமையில், மத்திய நிர்வாக இயக்குனர்கள் அடங்கிய குழு, ரிசர்வ் வங்கியை நிர்வகிக்கிறது. 
    • பர்மா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு, சில ஆண்டுகள், அந்நாடுகளின் மத்திய வங்கியாக, இவ்வங்கி செயல்பட்டது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகள் 
    • இந்திய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள், முத்திரைத் தாள்களை அச்சிடல்; தேசிய நிதிக்கொள்கையை செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல்; இந்திய வங்கிகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், கட்டுப்படுத்துதல், வினியோகித்தல் ஆகியவை, இவ்வங்கியின் முக்கிய பணிகள் ஆகும்.
முட்டாள்கள் தினம் - ஏப்ரல் 1 
  • பிரான்சில் முதன்முதலில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டது. 16 ஆம் நுாற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 தான், புத்தாண்டு தினமாக கடைபிடிக்கப்பட்டது. 13ம் கிரிகோரி என்ற போப் ஆண்டவர், 1582 பிப்ரவரி 29 இல், புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார்.இதில் ஜனவரி 1, புத்தாண்டாக மாற்றப்பட்டது. 
  • 1752ல் இங்கிலாந்து, அமெரிக்காவிலும் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவிலும் இக்காலண்டர் புழக்கத்திற்கு வந்தது. புதிய காலண்டரை ஏற்காத நாடுகளை, ஒவ்வொரு ஏப்ரல் 1-ந்தேதியும் அவர்களுக்கு வெற்று பரிசுப்பெட்டியை அனுப்பி வைத்து அவர்களை ஏமாற்றினர். இதை 'முட்டாள்கள் தினம்' என அழைத்தனர். 
ஒடிசா மாநிலம் உருவாக்கப்பட்ட நாள் -  ஏப்ரல் 1

  • ஒடிசா மாநிலம் உருவாக்கப்பட்ட நாள், 1936 ஏப்ரல் 1 அன்று உருவாக்கப்பட்டது. இந்த நாள்  "உட்கல் திவாஸ்" (Odisha Formation Day, Utkal Divas) என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
April 2nd - National and International days

உலக குழந்தைகள் புத்தகத் தினம் - ஏப்ரல் 2 
  • குழந்தைகளுக்காகத் தங்கள் நல்வாழ்வை அர்ப்பணித்த டென்மார்க்கைச் சேர்ந்த ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சன் நினைவாக, அவர் பிறந்த ஏப்ரல் 2-ந்தேதி உலகக் குழந்தைகள் புத்தகத் தினமாக கொண்டாடப்படுகிறது. 
  • வாசிப்பு பழக்கத்தின் இன்றியமையாமையைக் குழந்தைகள்உணரச்செய்வது, இந்த நாளின் நோக்கமாகும்.
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் - ஏப்ரல் 2
  • World Autism Awareness Day 2 April 2019
  • ஆட்டிசம் என்பது குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஒருவிதக் குறைபாடு ஆகும். இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, உலக ஆட்டிசம் தினம் (World Autism Awareness Day) ஏப்ரல் 2 அன்று கடைபிடிக்கப்படுகிறது. 
  • ஆட்டிசம் என்பது மூளைத் தகவல்களை பயன்படுத்திப் புரிந்து கொள்ளும் திறனை தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை சரியாகப் பயன்படுத்த முடியாத காரணங்களால் அவர்களின் நடவடிக்கைகளில் காணப்படும் வித்தியாசங்கள் ஆட்டிசம் என்பதாகும்.
  • 2019 World Autism Awareness Day Theme
    • Assistive Technologies, Active Participation.
  • 2019 உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு நாள் மையக்கருத்து
    • "துணை தொழில்நுட்பங்கள்,செயலில் பங்கேற்பு" என்பதாகும்.
April 4th- National and International days

சர்வதேச கண்ணிவெடி விழிப்புணர்வு நாள் - ஏப்ரல் 4
  • ஆண்டுதோறும் ஐ. நா. அவை, ஏப்ரல் 4 ம் தேதி அன்று சர்வதேச கண்ணிவெடி விழிப்புணர்வு நாளாக (International Day for Mine Awareness and Assistance in Mine Action) கடைபிடிக்கிறது.
  • உலகெங்கிலும் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை பற்றிய விழிப்புணர்வை இந்நாள் ஏற்படுத்துகிறது.
  • 2019 சர்வதேச கண்ணிவெடி விழிப்புணர்வு தின மையக்கருத்து (2019 Theme):
    • United Nations Promotes SDGs – Safe Ground – Safe Home என்பதாகும்.
தேசிய கடல்சார் தினம் - ஏப்ரல் 5
  • இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் SS Loyalty, 1919, ஏப்ரல் 5 ஆம் தேதி மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்தது. இதை நினைவுகூறும் வகையில் 1964 ஆம் ஆண்டு முதல், ஏப்ரல் 5 ஆம் தேதி, தேசிய கடல்சார் தினம் (National Maritime Day 2019) கொண்டாடப்படுகிறது. 
  • 56-வது ஆண்டு தேசிய கடல்சார் தினம், 2019 ஏப்ரல் 5 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • 2019 தேசிய கடல்சார் தினம் 2019-இன் கருப்பொருள்: 
    • “இந்திய பெருங்கடல்- பெருங்கடல் வாய்ப்புகள்” (Indian Ocean-An Ocean of opportunity) என்பதாகும்.
  • இந்திய கடற்கரையின் நீளம் 7,517 கி.மீ., நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 90 சதவீதம், துறைமுகங்கள் மூலமே நடைபெறுகிறது. 
  • இந்தியாவில் ஹல்டியா, பாரதீப், விசாகபட்டினம், சென்னை, எண்ணுார், துாத்துக்குடி, கொச்சி, நியூ மங்களூரு, மர்மகோவா, பனாஜி, நேரு துறைமுகம் (மும்பை), கண்ட்லா என 13 பெரிய துறைமுகங்கள், 200 நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்கள் செயல்படுகின்றன.
சம்தா திவாஸ் (பாபு ஜெகஜீவன்ராம் பிறந்த நாள்) - ஏப்ரல் 5 2019
  • முன்னாள் துணைப் பிரதமர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் "பாபு ஜெகஜீவன் ராம்" அவர்களின் 111-ஆவது பிறந்த நாள் ஏப்ரல் 5, 2019 அன்று கடைபிடிக்கப்பட்டது. 
  • இந்த நாள் "சம்தா திவாஸ்" என்று அழைக்கப்படுகிறது. 
  • பாபு என அழைக்கப்படும் ஜெகஜீவன்ராம், பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டம், சந்த்வா கிராமத்தில் சாமர் எனும் பிறந்தவர்.
  • 1946ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேருவின் தலைமையிலான இடைக்கால அரசில் தொழிலாளர்நலத் துறை அமைச்சராக இருந்தவர். 
  • 24 மார்ச் 1977 – 28 ஜூலை 1979 வரை இந்தியத் துணை பிரதமர் பதவி வகித்தவர்.
  • இந்திய அரசியலமைப்பு சட்ட முன்வடிவக் குழுவில் உறுப்பினராக செயல்பட்டவர்.








Post a Comment (0)
Previous Post Next Post